புனேவில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 17 பேர் பலி

Date:

இந்திய மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.

உரவாடே கிராமத்தில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் அக்வா டெக்னாலஜிஸ் என்ற அந்த நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, எந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும், 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பெருமளவு தீ பரவியதன் காரணமாக நிறுவனத்தின் சுவரை உடைத்து தான் உள்ளே சென்று 20 பேரை அவர்கள் மீட்டனர். எனினும் தீயில் கருகி 17 ஊழியர்கள் பரிதாபமாக பலியாயினர்.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...