நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்துக்கு, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து தீரமானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(18) கூடவுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தின் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பதற்காக, அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியில் உறுப்புரிமைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணத்தை, கட்சி அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்தவார ஆரம்பத்தில் கையளித்திருந்தது.