இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத் தலைவருக்கு விளக்கமறியல்!

Date:

சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில்,

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவரான ரஜீவ் மெத்தீவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட மேலும் பல அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் கடந்த 4 ஆம்திகதி காலை ஊடக அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.

பின்னர் இந்த செய்தி பொய்யானது என அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய, ரஜீவ் மெத்தீவ், மறுதினம் தனது சட்டத்தரணியுடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்கியதையடுத்து கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...