தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடல்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில், நாளை மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவிருந்தது.

புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு இன்று பிற்பகல் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், நாளைய தினம் நடைபெற இருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தங்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சந்திப்புக்கான திகதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படுமென்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...