நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (07) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு, காலி,களுத்துறை, கம்பஹா, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.