பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை!

Date:

வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தோர் உள்ளடங்களாக 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை இன்று (03) சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பிசீஆர் முடிவுகள் 24 மணிநேரத்தில் வழங்க சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன ​அடிப்படையில் 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் வவுனியா, குருமன்காடு பகுதியில் பயணத்தடை நேரத்தில் வீதியால் பயணித்தோர், அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், வங்கி காவலாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோர், சில கிராமங்களைச் சேர்ந்தோர், வவுனியா நகரம் என எழுமாறாக 130 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இதன் முடிவுகளை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...