பால் மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை!

Date:

ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதால் தாம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வருடாந்தம் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் பால் மாவினை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்கிறது.

தற்போது நாட்டின் பால் மா தேவையில் 75 சதவீதமானவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது.

எனினும், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் சர்வதேச சந்தையில் பால் மாவின் கேள்வி மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை புள்ளிவிவரங்களின் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது நாட்டில் 4 முதல் 6 வாரங்களுக்கு தேவையான பால் மா தொகையே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...