ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதால் தாம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வருடாந்தம் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் பால் மாவினை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்கிறது.
தற்போது நாட்டின் பால் மா தேவையில் 75 சதவீதமானவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது.
எனினும், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் சர்வதேச சந்தையில் பால் மாவின் கேள்வி மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை புள்ளிவிவரங்களின் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், தற்போது நாட்டில் 4 முதல் 6 வாரங்களுக்கு தேவையான பால் மா தொகையே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.