பிரான்ஸ் அதிபரை தாக்கியவர் வாக்கு மூலம்!

Date:

பிரான்ஸ் நாட்டின்அதிபர் கொரோனா பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னர் மக்களுடனான பிரச்சினைகளை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இதன் போது நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார்.

அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது அந்நாட்டின் பிரஜை ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்து அதிபரை பின்னே இழுத்து தூர அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபரை அறைந்த காரணத்தை விளக்கியுள்ளனர்.

அதிபர் பின் பற்றும் நட்டின் பொருளாதார கொள்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மக்கள் கஷ்டங்களை எதிர் நோக்குவதாகவும், இதனால் தான் அதிபரின் கன்னத்தில் அறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...