பேருவளை மருதானை செரிடி அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Date:

பேருவளை பிரதேசத்தில் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார நலன்புரி செயல்திட்டங்களை மேற்கொண்டு வரும் பேருவளை Maradana Charity அமைப்பு இன்று  கொவிட்  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் தேவையான 2, 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

Maradana Charity அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் தஸ்தகீர் பாச்சா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார அவர்கள் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் Maradana Charity அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதேச நலன்விரும்பிகள், தனவந்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம், சிங்கள, மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தற்பொழுது நிலவுகின்ற நெருக்கடியான நிலைமையில் வறிய மக்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும் என்பதுடன், இந்நலன்புரிச் சேவை பிரதேசத்தின் சக வாழ்வினை மேலும் கட்டியெழுப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Popular

More like this
Related

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...