பேருவளை மருதானை செரிடி அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Date:

பேருவளை பிரதேசத்தில் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார நலன்புரி செயல்திட்டங்களை மேற்கொண்டு வரும் பேருவளை Maradana Charity அமைப்பு இன்று  கொவிட்  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் தேவையான 2, 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

Maradana Charity அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் தஸ்தகீர் பாச்சா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார அவர்கள் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் Maradana Charity அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதேச நலன்விரும்பிகள், தனவந்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம், சிங்கள, மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தற்பொழுது நிலவுகின்ற நெருக்கடியான நிலைமையில் வறிய மக்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும் என்பதுடன், இந்நலன்புரிச் சேவை பிரதேசத்தின் சக வாழ்வினை மேலும் கட்டியெழுப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...