தலவாக்கலை நகர சபைத் தலைவர் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், தலவாக்கலை பகுதியில் உள்ள மண்டபம் ஒனறில் நிகழ்வு ஒன்றை நேற்று (20) நடத்தியமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.