தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடல்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில், நாளை மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவிருந்தது.

புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு இன்று பிற்பகல் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், நாளைய தினம் நடைபெற இருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தங்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சந்திப்புக்கான திகதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படுமென்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...