புனேவில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 17 பேர் பலி

Date:

இந்திய மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.

உரவாடே கிராமத்தில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் அக்வா டெக்னாலஜிஸ் என்ற அந்த நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, எந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும், 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பெருமளவு தீ பரவியதன் காரணமாக நிறுவனத்தின் சுவரை உடைத்து தான் உள்ளே சென்று 20 பேரை அவர்கள் மீட்டனர். எனினும் தீயில் கருகி 17 ஊழியர்கள் பரிதாபமாக பலியாயினர்.

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...