உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Date:

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது.

 

பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

 

இதனையடுத்து, இன்று மாலை 5.40 மணியளவில், குறித்த அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பமானது.

 

இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 152 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், பிரேரணைக்கு எதிராக 61 வாக்குகள் அளிக்கப்பட்டன.

 

அதற்கமைய, உதயகம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...