எப்போது நாடு முழுமையாக திறக்கப்படும்?  இராணுவதளபதி வெளியிட்ட தகவல் 

Date:

அனேகமாக செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராணுவதளபதி சவேந்திரசில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கொரோனா வைரசினை தாகமுடைய அனேகமானவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது பெற்றிருப்பார்கள் என்ற அடிப்படையில் நாட்டை செப்டம்பர் மாதமளவில் திறக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது அவ்வேளையில் காணப்படும் நிலவரத்தை பொறுத்தே இந்த முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக மாற்றமடைந்திருக்கும் வைரசினை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா இதன் காரணமாக புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
நிலைமையை எதிர்வுகூறமுடியாது என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா செப்டம்பரில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என உறுதியாக தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...