வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த காலமானார்!

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த (61) காலமானார்.

 

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சுகயீனம் காரணமாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

 

கமல் ரத்வத்த, கடந்த 2019 டிசம்பரில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராக பதவியேற்றார்.

 

இதற்கு முன்னதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் உப தலைவராகவும், காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பணிப்பாளராகவும் பதவி வகித்த இவர், இரத்தினபுரி சுமன சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாகவும் செயற்பட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரரான க்ளிபர்ட் ரத்வத்தவின் புதல்வரான கமல் ரத்வத்த பிரபல தொழிலதிபருமாவார்.

 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...