ஹிஷாலினியினை சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்-நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமிக்கு நீதிவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தும் அரசியல் கட்சிகள் கடந்த காலத்தில் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று(31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையினை முன்வைத்த அவர், சிறுமி ஹிஷாலினியினை சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் அத்துமீறிய காணி அபகரிப்பினை முன்னெடுக்கும்போது அதனை தடுத்து நிறுத்தமுடியாத நிலையிலேயே இங்குள்ள அரசாங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...