இலங்கை கொள்வனவு செய்துள்ள 2 இலட்சம் தடுப்புசி டோஸ்களின் முதல் தொகுதியாக 26,000 ஃபைஸர் தடுப்பூசி டோஸ்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நேற்றைய தினம் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.