இலங்கை உட்பட மேலும் சில நாடுகளுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு இராச்சியம்!

Date:

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை உட்பட 13 நாடுகளுக்கான பயணத் தடையினை ஐக்கிய அரபு அமீரகம் வியாழனன்று அறிவித்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், பயணப் பருவத்தின் தொடக்கத்துடன், குடிமக்கள் கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் வெளியுறவு மற்றும் தேசிய அவசர அமைச்சங்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 14 நாட்களில் இந்தியா, நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்தவர்களுக்கு நுழைவுத் தடை ஜூன் 23 முதல் குறைவடையும் என்று துபாய் ஜூன் 19 அன்று கூறியிருந்தது.

அதற்கிணங்க கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்களுக்கும், தென்னாபிரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும், கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்த நைஜீரியாவிற்கும் இந்த நுழைவு அனுமதிக்கப்படும்.

இந் நிலையிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மேற்கண்ட தடை உத்தரவினை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...