பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு!

Date:

பயங்கரவாத தடை சட்டத்தின் சில சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு சபையினால் இந்த குழு நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.இந்தக் குழு, குறித்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய சரத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.இதன்படி குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரம் பல்வேறு அமைப்புகளும் நாடுகளும் இதுதொடர்பான வலியுறுத்தல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...