பிணை முறி திருடர்கள்,மதுபான கடத்தல்காரர்களுடன் எந்தவிதமான தொடர்புகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

Date:

பிணை முறிகள் பணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் யாரும் அடிபணிய மாட்டார்கள் என்றும் மக்களின் அபிலாஷைகளுக்கே துணை நிற்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின்’எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் திரு.சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடளாவிய ரீதியாக செயற்பட்டுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ திட்டத்தின் 20 ஆவது கட்டமாக இருபத்தி மூன்று மில்லியன் இருபதாயிரம் ரூபா (2,320,000.00)

மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரத்தை மன்னார் மாவட்ட மருத்துவமனையின் பனிப்பாளர் வைத்தியர் கே. செந்தூர்பதிராஜாவுக்கு நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று(06) பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ராஜித சேனரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம்,சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...