பிணை முறி திருடர்கள்,மதுபான கடத்தல்காரர்களுடன் எந்தவிதமான தொடர்புகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

Date:

பிணை முறிகள் பணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் யாரும் அடிபணிய மாட்டார்கள் என்றும் மக்களின் அபிலாஷைகளுக்கே துணை நிற்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின்’எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் திரு.சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடளாவிய ரீதியாக செயற்பட்டுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ திட்டத்தின் 20 ஆவது கட்டமாக இருபத்தி மூன்று மில்லியன் இருபதாயிரம் ரூபா (2,320,000.00)

மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரத்தை மன்னார் மாவட்ட மருத்துவமனையின் பனிப்பாளர் வைத்தியர் கே. செந்தூர்பதிராஜாவுக்கு நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று(06) பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ராஜித சேனரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம்,சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...