நாட்டில் மேலும் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 267,149 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வர தாமதிப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்
இதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.