வெளிநாட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்த அரசு கவனம்!

Date:

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.அவ்வாறான வெளிநாட்டுப் பயணிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

 

இந்த திட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதியின் பின்னர் செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.ஏனைய வெளிநாட்டவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள், Bio-bubble பாதுகாப்பு முறைமையின் கீழ் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு உள்ளீர்ப்பதற்கு விமான நிறுவனங்கள் மூலம் நிவாரணத் திட்டங்களை வழங்குவது தொடர்பிலும் சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...