இலத்திரனியல் வாகனப் பாவனையை அதிகரிக்க அமைச்சரவை

Date:

 

இலத்திரனியல் வாகனப் பாவனையை அதிகரிக்க அமைச்சரவை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய 2020 ஆம் ஆண்டிறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 08 மில்லியன்களைத் தாண்டியுள்ளது.

அவற்றில் குறிப்பிடத்தக்களவு வாகனங்கள் 10 வருடங்களுக்கும் அதிகமாக பழைய வாகனங்கள் ஆவதுடன், அவ்வாறான பழைய வாகனங்கள் சரியான வகையில் பராமரிக்கப்படாமையால் நச்சு வாயுக்கள் வெளியிடப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் வாயு மாசடைதலில் 60 வீதமானவை மோட்டார் வாகனங்களால் இடம்பெறுவதாக மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீள்பிறப்பாக்க எரிசக்தித் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்வது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக அமைவதால், மோட்டார் வாகனப் போக்குவரத்திற்கு மீள்பிறப்பாக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலத்திரனியல் வாகனப் பாவனையை ஊக்குவிப்பதற்காக மூலோபாயத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...