டெவோன் நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற யுவதி மாயம்!

Date:

பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற யுவதி ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

லிந்துலை, லென்ந்தோமஸ் தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய மணி பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீரில் அடித்து சென்றுள்ளார்.

 

3 நண்பிகளுடன் இன்று (18) மதியம் 01 மணியளவில் டெவோன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற குறித்த யுவதி டெவன் ஆற்றில் இறங்கி கால்களை கழுவ முற்பட்ட போதே நீரில் அடித்துச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

 

டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் கற்பாறை பகுதியில் வழுக்கல் நிலை காணப்படுவதனால் அப்பகுதியில் நுழைய வேண்டாம் என தடை கம்பி வேலி அடிக்கப்பட்டுள்ள போதிலும் அதை தாண்டியே யுவதிகள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

297 அடி உயரமுள்ள டெவன் நீர் வீழ்ச்சியில் இருந்து கீழே வீழ்ந்திருக்காலம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் காணாமல் போன யுவதியை மீட்கும் பணியில் இராணுவத்தினரும், திம்புள்ள பத்தனை பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...