தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 563பேர் கைது!

Date:

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 563 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 46,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று (02) மாத்தளை மாவட்டத்தில் 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 564 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...