அமெரிக்காவில் விருது வென்ற குருநாகல் பறகஹதெனிய சேர்ந்த எம்.எஸ்.எம்.சப்றாஸ்

Date:

குருநாகல், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்தவரும், அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராருமான எம்.எஸ்.எம்.சப்றாஸ், அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்டு வழங்கப்படும் சான்றிதழ் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தொழில் முயற்சியாண்மை முகாமைத்துவம் தொடர்பான பாடநெறிக்காக கடந்த ஜனவரியில் தெரிவுசெய்யப்பட்ட இவர் அமெரிக்க்காவிலுள்ள கேனல் பல்கலைக்கழகத்தில் தனது கற்கை நெறியைப் பூர்த்தி செய்து இந்த சான்றிதழ் விருதையும் பெற்று நாடு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே எமது நாட்டில் ஜனாதிபதியின் செயலாளர்களாக பதவி வகித்த பிரட்மன் வீரக்கோன் மற்றும் லலித் வீரதுங்க போன்றோர் இந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இலங்கையிலிருந்து தமிழ் பேசும் சமூகம் சார்பாக இந்த கற்கைநெறிக்குத் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறியைப் பூர்த்தி செய்து சான்றிதழ் விருதைப் பெற்ற முதலாமவர் M.S.M. சப்றாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பறகஹதெனியாவைச் சேர்ந்த முகம்மட் சௌபான் சொஹறா உம்மா தம்பதியின் புதல்வரான இவர்,2017 இல் இந்தியாவிலும், 2018, 2019,ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரிலும், 2019,2020ஆம் ஆண்டுகளில் சீனாவிலும் பல கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பித்தக்கது.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...