அமெரிக்காவில் விருது வென்ற குருநாகல் பறகஹதெனிய சேர்ந்த எம்.எஸ்.எம்.சப்றாஸ்

Date:

குருநாகல், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்தவரும், அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராருமான எம்.எஸ்.எம்.சப்றாஸ், அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்டு வழங்கப்படும் சான்றிதழ் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தொழில் முயற்சியாண்மை முகாமைத்துவம் தொடர்பான பாடநெறிக்காக கடந்த ஜனவரியில் தெரிவுசெய்யப்பட்ட இவர் அமெரிக்க்காவிலுள்ள கேனல் பல்கலைக்கழகத்தில் தனது கற்கை நெறியைப் பூர்த்தி செய்து இந்த சான்றிதழ் விருதையும் பெற்று நாடு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே எமது நாட்டில் ஜனாதிபதியின் செயலாளர்களாக பதவி வகித்த பிரட்மன் வீரக்கோன் மற்றும் லலித் வீரதுங்க போன்றோர் இந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இலங்கையிலிருந்து தமிழ் பேசும் சமூகம் சார்பாக இந்த கற்கைநெறிக்குத் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறியைப் பூர்த்தி செய்து சான்றிதழ் விருதைப் பெற்ற முதலாமவர் M.S.M. சப்றாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பறகஹதெனியாவைச் சேர்ந்த முகம்மட் சௌபான் சொஹறா உம்மா தம்பதியின் புதல்வரான இவர்,2017 இல் இந்தியாவிலும், 2018, 2019,ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரிலும், 2019,2020ஆம் ஆண்டுகளில் சீனாவிலும் பல கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பித்தக்கது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...