கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் அரசு!

Date:

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அசாங்கம் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகபூர்வ அரசு இல்லத்தை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.

 

கல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்காக குறித்த இல்லத்தை வாடகைக்கு விடத் தயார் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

 

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால் அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக ஆடம்பரமான அரசு இல்லத்தில் பிரதமரும் ஆளுநர் மாளிகைகளில் ஆளுநர்களும் தங்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கிரே பட்டியலில் வைத்திருப்பதால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...