சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரிக்கா!

Date:

தனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். தனது முகப்புத்தக பக்கத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

“விமுக்தி குமாரதுங்க அரசியலில் பிரவேசிக்கின்றார் என்ற தவறான பிரசாரம் இந்த நாட்களில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான அறிக்கை. நான் அதனை முழுமையாக நிராகரிக்கிறேன்.

 

அரசியலில் பிரவேசிக்கும் ஆர்வமோ விருப்பமோ அவருக்கு இல்லை, விமுக்தி குமாரதுங்க நம் நாட்டை மிகவும் நேசித்தாலும், நாட்டுக்கு சேவை செய்வதற்கான ஒரே வழி அரசியல் அல்ல என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

 

எனவே, இதுபோன்ற பொய்யான பிரசாரங்களால் மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...