பேருந்துகள் தொடர்பில் இன்று முதல் விஷேட தேடுதல் நடவடிக்கை!

Date:

சுகாதார வழிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற அனைத்து பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

நாடு பூராகவும் இன்று முதல் இதுதொடர்பான தேடுதல் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சினால் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்கின்ற அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், தனியார் பஸ்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் கடந்த 3 நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி பயணிகளை அழைத்து செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடே இதற்கு காரணம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...