26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணம்!

Date:

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு வீடுகளிலிருந்து சிகிச்சை வழங்கும் கொவிட் ஒன்றிணைந்த மனைசார் சேவையின் கீழ் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பதிவு செய்து நோயாளிகள் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் அயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் 2222 கொவிட் நோயாளர்கள் குணமடைந்து ​நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதன்படி, நாட்டில் குணமடைந்த மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டு மக்களில் ஒரு கோடி 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். ஐம்பத்தி ஆறு லட்சத்து 64 ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...