கொரோனா மரணங்கள் தொடர்பில் விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்தது

Date:

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதன் ஊடாக மற்றுமொரு தகவல் தெரியவந்துள்ளதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரல்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் முதற்தடவையாக இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில், கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் கொவிட் நியுமோனியா நிலமையினாலேயே உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நியூமோனியா நோய் நிலைமைக்கு முன்னதாக ஏற்படும் நுரையீரல் சிக்கலானது எக்கியூட் லிம்போஸிட்டிக் இன்ரஸ்ட்ரீஸல் நிவ்மோ நைன்டீஸ் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சடலங்களை பரிசோதனை செய்ததன் மூலமே இவ்விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 100 இற்கு அதிகமான  சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...