உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் புதிய திருப்பங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணி- ரமீஸ் ராஜாவின் அதிரடி முடிவு!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலககிண்ண போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹைடன் ,தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் பிலான்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ரமீஸ் ராஜா அறிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ரமீஸ் ராஜா லாகூர் மைதானத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து இந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட மிஸ்பாஹ் உல் ஹக் அதே போன்று பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் அண்மையில் உலக கிண்ண அணி அறிவிக்கப்பட்ட பின் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.இந் நிலையில் நியூசிலாந்துடனான உள்ளூர் தொடருக்கு பாகிஸ்தான் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக சக்லைன் முஷ்தாக், பந்துவீச்சாளராக அப்துல் ரசாக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே அடுத்து வர உள்ள மிக முக்கியமான உலக்கிண்ண தொடருக்கு மத்தியூ ஹெய்டன்,பிலான்டர் ஆகியோர் பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜா நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...