அசாத் சாலி வழக்கில் CID யின் ஆலோசனையை பெற அனுமதி!

Date:

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரி, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (06) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் சந்தேக நபரை விடுவிக்குமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறப்போவதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்தது.அத்தோடு வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...