இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் இரு குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுசந்திக்கா ஜயசிங்க தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்