மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரி, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (06) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் சந்தேக நபரை விடுவிக்குமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறப்போவதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்தது.அத்தோடு வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.