தென்னாபிரிக்கா அணிக்கு இலகு வெற்றி இலக்கு!

Date:

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடை​யிலான இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் டப்ரய்ஸ் சம்ஸி (Tabraiz Shamsi ) மற்றும் அய்டன் மர்க்ரம் (Aiden Markram) ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.போர்டியுன்(Bjorn Fortuin )இரண்டு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.இதற்கமைய, தென்னாபிரிக்கா அணிக்கு 104 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...