நாடு முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசப்பட்டு வருகின்றது.இதில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்குடன் சிறியளவில் மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .அத்தோடு வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை அமுலில் இருந்தாலும் கூட பெருமளவிலான மக்கள் கூட்டம் நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதை சமூக ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.எனவே இந்த இக் கட்டான சூழ்நிலையில் மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவர்களுடைய பொறுப்பாகும்.