நாட்டின் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடு குறித்து அரசின் சில அமைச்சர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.