அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர், இன்று 22 பிரதமருடன் சந்திப்பு

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் அதி சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்கள் இன்று 22 அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணத்துக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பிரதமருடைய சேவைகளைப் பாராட்டி விசேட நினைவுச்சின்னமொன்று ஆன்மீகத் தலைவரினால் வளங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவராக பதவி ஏற்று இலங்கைக்கு முதல் தடவையாக தனது உத்துயோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டதை முன்னிட்டு பிரதமரினால் ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச்சின்னமொன்றை வழங்கி கௌரவித்தடுடன் பிரதமர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும்,பிரதமரின் பெளத்த மத மற்றும் கலாசார விவகார இணைப்பாளரான கலாநிதி அக்ரஹரே கஸ்ஸப்ப நாயக தேரர், பிரதமரின் இனைப்புச் செயளாலர் அல்-ஹாஜ் பர்ஸான் மன்ஸுர்,
ஏற்பாட்டுக்குழு தலைவர் அல்-ஹாஜ் மொஹிதீன் காதர்,மற்றும் ஏற்பாட்டுக்குழு  ஒருங்கினைப்பாளர் அல்-ஹாஜ் முய்னுதீன் பின் மொஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது கலந்து கொண்டனர்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...