ஐ.சி.சி.யின் ஹோல் ஒப் பேம்க்கு மஹேல ஜயவர்தன தெரிவு!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென் ஆபிரிக்காவின் ஷோன் பொலேக் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஹோல் ஒப் பேம்க்கு தெரிவாகியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக 2009ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஹோல் ஒப் பேம் விருதுகளை வழங்கி வருகிறது.அந்த வகையில், இந்த வருடம் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென் ஆபிரிக்காவின் ஷோன் பொலோக் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜயவர்தன 11,814 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதில் 34 சதங்களும், 50 அரைச் சதங்களும் அடங்குகின்றன.அதேபோல், 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12,650 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 19 சதங்களும், 77 அரைச் சதங்களும் அடங்குகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஆகியோருக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...