களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்!

Date:

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நீர்வெட்டு இடம்பெறுமென நீர் வழங்கல்  வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதற்கமைய, நாளை மறுதினம் (25) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் 10 மணிநேர நீர்வெட்டு இடம்பெறுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை  அறிவித்துள்ளது.

அதற்கமைய வாதுவ, வஸ்கடுவ,பொம்புவல, மக்கொன, பேருவளை, தர்கா நகர்,பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, பெந்தொட்ட, பயாகல, அழுத்கம, பெலவத்த, களுவமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த ஒன்றிணைந்த நீர் விநியோக வேலைத்திட்டத்தின் அத்தியாவசிய திருத்த பணிகளின் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...