கிண்ணியா பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி!

Date:

திருகோணமலை -கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலம் மூழ்கியுள்ள சம்பவம் இன்று (23)காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 6 ஆகஉயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகக் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காகஅனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்வதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...