கொழும்பு FEEDLANKA நிறுவனத்தின் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !

Date:

(அதீக் அமீனுத்தீன்)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக தமது தொழில்களை இழந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலையிலுள்ள வறிய மக்களுக்கு உதவும் வகையில் உலர் உணவு பொருட்கள் வழங்கும் செயற்திட்டத்திற்காக மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஜும்ஆ பள்ளி நிருவாக சபையினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையிலே கொழும்பில் உள்ள FEEDLANKA நிறுவனத்தின் அனுசரணையில் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட உணவுப் பொதிகள் நமது மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் மாஹோ பிரதேசத்தில் உள்ள தேவையுடைய குடும்பங்கள்தெரிவு செய்யப்பட்டு தலா ஒருவருக்கு 5000/= ரூபா பெறுமதிமிக்க உலர் உணவுப் பொதிகள் நேற்று (06.11.2021) சனிக்கிழமை மஸ்ஜித் ஆயிஷா ஜும்ஆ பள்ளி வளாகத்தில் வைத்து அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமல்லாது கஷ்டத்தில் இருக்கும் தேவையுடைய அனைத்து இன மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த நன்கொடைகளை வழங்கிய கொழும்பு FEEDLANKA நிறுவனத்திற்கும் அதற்கு துணையாக நின்று நிகழ்வை ஏற்பாடு செய்த மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...