தமிழர்களை விட இஸ்லாமியர்களே எங்களை அதிகம் ஆதரிக்கிறார்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

Date:

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை ஆதரிப்பதனை விடவும் , முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து கிடைக்கின்ற ஆதரவு பெருமளவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பு நேற்று (24) டொராண்டோ நகரில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.சில இஸ்லாமிய அரசியல்வாதிகளிடம் ஒரு கருத்து இருக்கின்றது அதாவது, இவர் என்ன எங்களுடைய பிரச்சினைகளை கதைக்கின்றார் ,எங்களுக்காக பேசுகின்றார் என்கின்றனர்.எனினும் நான் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றேன்.

அதிலும் முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் அதி வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை ஆதரிப்பதனை விடவும் முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து கிடைக்கின்ற ஆதரவு பெரிதளவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் குறிப்பிட்டார்.

எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிப்போவதில்லையென அது உண்மை தான்.என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளுக்காக எதனையும் செய்யவில்லை.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் , இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின் எதிர்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து விடும் என்றார்.

https://m.facebook.com/story.php?story_fbid=442090857284912&id=100044520053805

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...