வட மாகாணத்தின் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Date:

இன்று (10) வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவத்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பிட்ட மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவிக்கின்றார்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு நேற்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், இன்று வட மாகாணத்தின் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...