வைத்தியசாலையிலிருந்து ரிஸ்வான் அரையிறுதிக்கு “ஒரு போர் வீரனைப் போல வந்தார்”- மெதிவ் ஹேடன்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான முஹம்மத் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மெதிவ் ஹேடன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.நேற்றைய ஆட்டத்தில் ரிஸ்வான் 52 பந்துகளில் 62 ஓட்டங்களை அதிரடியாக அடித்தார்.ஆட்டத்தின் முன்னைய நாள் நுரையீரல் பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எனவும் , அவர் எப்படி அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆட்டத்தில் கலந்து கொள்வார் என சந்தேகம் எழுந்தது ,முழு இரவும் மருத்துவமனையில் ரிஸ்வான் இருந்தார் மறு நாள் ” ஒரு போர் வீரனைப் போல களத்திற்கு வந்தார்” அவருடைய தைரியம் பாராட்டத்தக்கது என மெத்யு ஹேடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இது ஒரு முரண்பாடு தான் .என் இதயம் எப்போதும் அவுஸ்திரேலியாவுக்காகத்தான் துடிக்கும்.ஆனால் நான் பாகிஸ்தான் அணியில் ஒரு பகுதியாக இருப்பதையே விரும்புகிறேன் என்றார்.

ரிஸ்வானின் நிலை பற்றி அணித்தலைவர் பாபர் அசாம் கூறும் போது, நான் ரிஸ்வானை பார்க்கும் போது சுகமடைந்த தோற்றத்தில் இருந்தார்.நான் அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தேன். “என்னால் இன்று விளையாட முடியும் என அவர் கூறினார்.அதே போலவே இன்று அவர் சிறப்பாக  விளையாடியுள்ளார் என்று தெரிவித்தார்.

 

அப்ரா அன்ஸார்

 

 

 

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...