கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதிப்படைந்ததால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவைகள் இன்று (22) மீண்டும் ஆரம்பமாகிறது.
நாட்டில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மலையக புகையிரத பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன. பதுளை தொடக்கம் நானுஓயா வரையில் பல இடங்களில் இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்ததாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அவை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும். ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் தண்டவாளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இதன் காரணமாக இன்று (22)தொடக்கம் ரயில் சேவையை மேற்கொள்ள முடியும் என்றும் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)