கொழும்பு-கண்டி புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

Date:

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதிப்படைந்ததால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவைகள் இன்று (22) மீண்டும் ஆரம்பமாகிறது.

நாட்டில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மலையக புகையிரத பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன. பதுளை தொடக்கம் நானுஓயா வரையில் பல இடங்களில் இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்ததாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அவை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும். ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் தண்டவாளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இதன் காரணமாக இன்று (22)தொடக்கம் ரயில் சேவையை மேற்கொள்ள முடியும் என்றும் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...