சமையல் எரிவாயு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

Date:

எதிர்வரும் 6 நாட்களுக்குள் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படுமென லிட்ரோ நிறுவனம் இன்று (19) அறிவித்துள்ளது.

அரசு மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரன தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த நிலை சீராகும் எனவும் சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எந்த குறைபாடும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 6 நாட்களுக்குள் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் குறித்த தொகையை வழங்கக் கூடியதாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...