இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் கொவிட் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முடியுமென சிங்கப்பூர் சிவில் விமான அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய , இலங்கை, தாய்லாந்து, கம்போடியா,பிஜி, மாலைதீவு மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தாய்லாந்து பிரஜைகளுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.