நாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.அதன்பிடி 750 மி.லீற்றர் உள்நாட்டு அதி விசேட சாராய போத்தல் ஒன்று 96.14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் 5% தை விட குறைவான செறிவை கொண்ட பியர் 625 மி.மீற்றர் போத்தல் ஒன்றின் விலை 3.10 ரூபாவாலும் மற்றும் 5% தை விட அதிகமான செறிவை கொண்ட “பீர்” போத்தல் ஒன்றின் விலை 14 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.